சனி, 13 ஜூன், 2009

வளைகாப்பு 18/04/2008
























































18/04/2008 அன்று பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் , தமிழகத்தில் முதன்முறையாக ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து 148 கர்ப்பிணித்தாய்மார்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது . வெம்பாக்கம் ஒன்றியக்குழு துணைத்தலைவர் திரு .ஆர் . வேல்முருகன் , ஊராட்சி மன்றத்தலைவர்கள் திருமதி . தேன்மோழி துளசிராமன் , திருமதி . மல்லிகா பாலகிருஷ்ணன் , திரு. கே.ஏ.பூபதி , திருமதி . மண்ணம்மாள் கேசவன் , ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் . வட்டார மருத்துவ அலுவலர் மரு.தெ.ரத்தினவேல் தலைமையிலான மருத்துவக்குழுவினர் கர்ப்பிணித்தாய்மார்களுக்கு ஸ்கேன் உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளையும் செய்தனர் . ஆரம்ப சுகாதார நிலைய பிரசவம் பாதுகாப்பானது , சிறந்தது என்பதை கர்ப்பிணித்தாய்மார்களுக்கு விளக்கிக்கூறினர் . ஆரம்ப சுகாதார நிலையத்தில் வழங்கப்படும் சேவைகள் , வசதிகள் பற்றியும் கர்ப்பிணித்தாய்மார்களுக்கு விளக்கப்பட்டது . ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அங்குள்ள பணியாளர்கள் மீது கர்ப்பிணித்தாய்மார்களுக்கும் , பொதுமக்களுக்கும் நம்பிக்கையை வளர்க்கும் விதத்தில் நடத்தப்பட்ட வளைகாப்பில் முத்துலட்சுமி ரெட்டி , ஜனனி சுரக்க்ஷா மகப்பேறு திட்டங்களின் நிதி உதவிகள் , இலவச பயணச்சீட்டு போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன . தமிழர் கலாச்சாரப்படி வளைகாப்பு நடத்தப்பட்டு , 5 சுவை உணவு பரிமாறப்பட்டது . அனைத்து நாளிதழ் , வார இதழ்களின் நிருபர்கள் , அனைத்து தொலைக்காட்சி நிருபர்கள் கலந்து கொண்டு செய்திகளை வெளியிட்டு " பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலைய வளைகாப்பை " அனைவரும் பாராட்டும்படி செய்தனர் .



































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக