ஞாயிறு, 31 மே, 2009

நவீன ஆண் குடும்பநல அறுவை சிகிச்சை ( N.S.V.) முகாம் ‍‍:08/05/2009


08/05/2009 அன்று பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 10 ஆண்களுக்கு நவீன‌ ஆண் குடும்பநல அறுவை சிகிச்சை ( N.S.V.)நடத்தப்பட்டது . வழூர் வட்டார மருத்துவ அலுவலர் மரு எஸ் . ராஜா , மரு.சி.காவேரி,மரு.எம்.விஜயராகவன் ஆகியோர் கொண்ட குழுவினர் அறுவை சிகிச்சை செய்தனர் . வட்டார மருத்துவ அலுவலர் மரு.தெ.ரத்தினவேல் தலைமையில் 9 சுகாதார ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் கிராமம்தோறும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி ,அறுவை சிகிச்சை பயனாளிகளை தேர்வு செய்தனர் .

தமிழக அரசின் குடும்ப நல நிதி











பணியில் இருக்கும்போது இயற்கை எய்திய மாமண்டூர் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை பணியாளரின் துணைவியாருக்கு தமிழக அரசின் குடும்ப நல நிதி ரூ.1.5 லட்சத்திற்கான காசோலை வட்டார மருத்துவ அலுவலர் மரு.தெ.ரத்தினவேல் அவர்களால் வழங்கப்பட்டது .

உலக புகையிலை எதிர்ப்பு நாள் ஊர்வலம் 31/05/2009





































உலக புகையிலை எதிர்ப்பு நாள் ஊர்வலம் 31/05/2009 அன்று வடமணப்பாக்கம் கிராமத்தில் நடைபெற்றது . வடமணப்பாக்கம் ஊராட்சி மன்றதலைவர் திருமதி . மண்ணம்மாள் கேசவன் ஊர்வலத்தை துவக்கி வைத்தார் . ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். புகையிலையினால் ஏற்படும் தீமைகள் குறித்து வட்டார மருத்துவ அலுவலர் மரு.தெ.ரத்தினவேல் விளக்கிக் கூறினார் . முடிவில் கிராம சுகாதார செவிலியர் ஆர்.கல்யாணி நன்றி கூறினார் .